திங்கள், 31 மார்ச், 2014

கல்யாண வீரர்களிடம் சிக்கி சீரழியும், பரிதாபத்திற்குரிய பெண்கள்


     குடிகாரக் கணவர்களிடமும், சந்தேகப் பேர்வழிகளான கணவர்களிடமும் சிக்கித் தவிக்கும் ஏராளமானப் பெண்களைப்பற்றி கேட்டும், வாசித்தும், வேதனைப் படும் நமக்கு, கல்யாண வீரர்களாம், கயவர்கள் தங்கள் மனைவியரிடம் காண்பிக்கும் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றிக் கேட்கும் போது உண்டாகும் இந்த வலி சகிக்க முடியாத ஒன்று.
courtesy cartoonstock.com/google

     70 வயதான, திருவனந்தபுரம், முரிக்குப்புழா புதுவல்புத்தன் வீட்டில் அலியார் குஞ்ஞு என்னும் கல்யாண வீரர், ஒரு மனைவியுடன், 5 ஆண்டுத் திட்டம் போல், 5 வருடம்தான் குடித்தனம் நடத்துவாராம்.  பின்னர், அந்த மனைவியை அடித்து, உதைத்து எப்படியாவது “மொழி சொல்லி விடுவாராம்.  (மொழி சொல்லல் என்றால் விவாகரத்து செய்தல்).  கடந்த 20 வருடங்களில், 4 பேர், இப்படி அவரால் கைவிடப்பட்டு, அவர்களுடைய பெற்றோர்கள், மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்து வருகிறார்களாம். இதில் ஒரு மனைவிக்கு, இப்போது 18 வயதுதான் ஆகிறதாம்.  5 ஆம் மனைவியான, ஆலுவா, குஞ்ஞுண்ணிக்கரையில், ஷாகிதாவை, அடித்தும் உதைத்தும், “மொழி சொல்ல முயன்ற போது, ஷாகிதாவுக்கு உதவ அவரது உறவினரும், அண்டை அயல் வீட்டாரும் முன்வந்து, போலீசில் புகார் செய்து, அவரைக் கைது செய்து, அவருக்கு எதிரே வழக்குத் தொடர வைத்திருக்கிரார்கள்.  இது போன்ற, அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் எதிரே, நடவடிக்கை எடுக்க ஆவன செய்த அந்த நல்ல மனம் படைத்தவர்கள், பாராட்டுக்குறியவர்களே!

courtesy google

     அலியார் குஞ்ஞைப் போல் 5 வருடம் குடும்பம் நடத்த பொறுமை இல்லாத, பாலக்காடு, வல்லப்புழா, கிழக்கேபாட்டுத்தொடி வீட்டில் மஜீத் (38), வட கேரளத்திலுள்ள 14 இடங்களிலிருந்து, 14 கல்யாணங்கள் செய்திருக்கிறார்.  இவர், மனைவிகளை, “மொழி சொல்லி அவர்களைத் துன்புறுத்த மாட்டாராம். பதிலுக்கு அவரது நகைகளைக் கவர்ந்து காணாமல் போய்விடுவாராம்.  15 வது முறையாக, கொஞ்சம் அவசரப்பட்டுக் கல்யாணம் செய்யாமலேயே நகைகளைக் கவர முயன்ற போது, போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

     
courtesy google

    இவர், நாளிதழ்களில், “மணமகள் தேவை விளம்பரம் கொடுத்து, அதன் மூலம்தான் தன் கைவரிசையைக் காண்பித்து வந்திருக்கிறார், இத்தனைக் காலமாக.  அப்படி இவரது விளம்பரம் கண்டு, மன்னார்காடைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணின் பெற்றோர் இவரருடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள்.  தன் தாய், நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் இருப்பதாகவும், தன் மனைவியாகப் போகும் பெண்ணை அவர் பார்க்க ஆசைப்படுகிறார் என்றும், அவருக்குப் பிடித்துவிட்டால், உடனே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கூறி, அவர்களை ஏமாற்றி, தன் நண்பன், பனமன்னா சுலைமானின் காரில், அந்தப் பெண்ணை ஏற்றி, ஒரு காட்டுப் பிரதேசத்திற்குக் கொண்டுச் சென்று, மிரட்டி நகைகளைக் கவர்ந்துச் சென்றிருக்கிறார்.  எப்படியோ, வீட்டை அடைந்த அந்தப் பெண், போலீசில் புகார் கொடுக்க, மஜீதும், நண்பர்களும் கைது செய்யப்பட்டு, அவர்கள் ஒற்றப்பாலத்தில் விற்ற நகைகளும் மீட்கப்பட்டன.  இது போல் கைது செய்யப்படாத எத்தனையோ, மஜீதுகளும், அலியார் குஞ்ஞுகளும், கேரளத்தில் தங்கள் கைவரிசைகளைக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெற்றோர்கள், அவசரப்படாமல், சிந்தித்து, தீரவிசாரித்து மட்டுமே பெண்களை மணமுடித்துக் கொடுக்கவேண்டும். பெண்களும் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்து, இது போன்ற சம்பவங்கள் அவர்களது வாழ்வில் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்களைப் பற்றிக் கேட்கவோ, காணவோ செய்யும் போது, பொதுமக்களும் அதற்கு எதிராகப் புகார் கொடுக்கவோ, எதிர்த்துப் போராடவோ தயங்கக் கூடாது! அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்களை வேரோடு பிடுங்கி எறிய முடியும்! 

20 கருத்துகள்:

  1. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட கல்யாண ராமர்களுக்கு கொண்டாட்டம் தான் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. விவேக் ஒரு படத்தில் துப்பாக்கியால் சுடுவாரே, அது தான் இவர்களைப் போன்றவர்களுக்கு சரி...!

    பதிலளிநீக்கு
  3. இப்படி ஏமாற்றும் ஆண்களுக்கு நல்ல தண்டனை கொடுத்து மற்றவர்களை இது போன்ற செய்ல்களில் ஈடுபடாது இருக்கச் செய்ய வேண்டும். இந்த வழக்குகளில் தீர்ப்பு வருவதற்குள் பாதிக்கப் பட்ட பெண் பாட்டியாகிவிடுகிறாள்..... :(

    பதிலளிநீக்கு
  4. பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.
    இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கலாம்

    பதிலளிநீக்கு
  5. இவங்களுக்கு எப்படித்தான் பெண் கொடுக்க முன்வருகிறார்களோ?
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
    கல்லானாலும் கணவன் போம்ற நம் நாட்டில் சில ஒருதலைபட்சமான நடமுறைகள் மாற வேண்டும் சகோ. பசங்க எப்டி எக்ஸாம் எழுதிருகிறாங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதாங்க ஆச்சரியமா இருக்கு! சகோதரி! எப்படி விசாரிக்காம கல்யாணம் முடிவு செய்ய்றாங்கனு!

      பசங்க ம்ம்ம்...ஏதோ ஓகே தான்! அங்க எப்படி?

      நன்றி!

      நீக்கு
  6. விழிப்பூட்டும் நல்ல எச்சரிக்கைப் பதிவு
    நீங்கள் முடிவாகச் சொல்லிப்போனதைப்போல
    அதிக எச்சரிக்கையுடன் முடிவு செய்தலே
    சிறந்தது.அப்படியும் ஏதேனும் ஒரு வகையில்
    ஏமாற்றப்பட்டது தெரிந்தால் உடன் நடவடிக்கை
    எடுப்பதே மிகச் சிறந்தது
    காரணம் இதுபோன்ற தொடர் ஏமாற்றுதல்கள்
    தொடராதல்லவா ?

    பதிலளிநீக்கு
  7. கல்யாண வீரர்கள்! இன்னுமா இந்த கொடுமை நடக்கிறது! அதிர்ச்சியாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  8. அத சொல்லுங்க பகவான் ஜி! இவங்கள என்ன செய்யலாம் சொல்லுங்க ஜி!? கீழ DD சொல்றாரு பாருங்க...!!!!!!!

    நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  9. DD! இதுவும் நல்லாத்தான் இருக்கு! ஆனா சுட்டவங்க கம்பி எண்ண வேண்டியிருக்குமே! சட்டம் இறுக்கிப் பிடித்தால் நேர்வழி பிறக்கும்!
    நன்றி DD!

    பதிலளிநீக்கு
  10. அட! ஆமாம்ல! நண்பர் வெங்கட்! மிகவும் சரியே! பாதிக்கப்பட்ட பெண் பாட்டியாகும் போது கோர்ட் இருந்து என்ன பயன் என்று நம் மக்களும் வழக்கு போடுவதில்லை! போலும்....அதனால் தானோ பலர் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்து விடுகின்றார்கள்!? நல்ல கருத்து!

    பதிலளிநீக்கு
  11. மிகவும் சரியே கரந்தையாரே! ஆனால், பெற்றோர் சில சமயம் ஏமாந்துதான் விடுகின்றார்கள்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  12. ம்ம்ம்ம் இருக்கின்றதே! நண்பரே!

    //காமக்கிழத்தன்
    இன்னுமா ‘மொழி’ சொல்லுதல்.....!!!!//

    பதிலளிநீக்கு
  13. நண்பர் ரமணி ஜி! எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏமாற்றுதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன! சட்டம் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்! நல்ல கருத்து!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. இன்னும் நடக்கத்தானே செய்கின்றது! அதுவும் ஹைடெக் காலத்தில்! இந்த ஹைடெக் இன்னும் நிறைய இது போன்றவை நடக்க உதவுகின்றன!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  15. நித்ய கல்யாணப் பேர்வழிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. வாருங்கள்! ஹஹஹாஹ "நித்ய கல்யாணப் பேர்வழிகளை " பேர் சூப்பராக இருக்குதே! தண்டிக்கப்படவேண்டியவர்கள் தான்!

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. திகைப்பகவே உள்ளது. வெளுத்ததெல்லாம் பால் என்று இருப்பது தான் காரணம். பசுத் தோல் போர்த்திய புலிகளை இனம் காண சாமர்த்தியமும் தேவையல்லவா. எல்லோருக்கும் இருக்காதே சூழ் நிலைகள் சதிவலையில் வீழ்த்திவிடும். அது தான் விதியோ. நல்ல பதிவு இவைகளை தெரிவிப்பதன் மூலம் விழிப்புனரவை ஏற்படுத்தும் அல்லவா ! மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு